Published : 30 Oct 2017 06:05 PM
Last Updated : 30 Oct 2017 06:05 PM

வடிவேலுவுடன் கருத்து வேறுபாடு: இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பு நிறுத்தம்

 

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படக்குழுவினரோடு வடிவேலுவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'. ஈவிபி-யில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது குறித்து விசாரித்த போது, "வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் துவங்குவதற்கு வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவித்தனர்.

முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பும் தாமதமாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x