Published : 09 Nov 2017 10:23 PM
Last Updated : 09 Nov 2017 10:23 PM

பேசும் படங்கள்: சரண்யாவை மணந்தார் இயக்குநர் நலன் குமாரசாமி

இயக்குநர் நலன் குமாரசாமி- சரண்யா திருமணம் வியாழக்கிழமை திருச்சி வாசவி மஹாலில் நடைபெற்றது.

'சூதுகவ்வும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது. அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் 'காதலும் கடந்து' போகும் படத்தை இயக்கினார். 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'மாயவன்' ஆகிய படங்களில் திரைக்கதை, வசனத்தில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

இயக்குநர் நலன் குமாரசாமிக்கும் அவரது உறவினரான சரண்யாவுக்கும் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று திருச்சி வாசவி மஹாலில் நலன் குமாரசாமிக்கும், சரண்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, பார்த்திபன், கருணாகரன், மடோனா செபாஸ்டியன், சாந்தனு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருமணத்துக்காக நலன் குமாரசாமி உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.

பேசும் படங்கள்:

 

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x