Last Updated : 03 Nov, 2017 04:55 PM

 

Published : 03 Nov 2017 04:55 PM
Last Updated : 03 Nov 2017 04:55 PM

லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுகிறது: விழித்திரு இயக்குநர் கடும் வேதனை

லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று 'விழித்திரு' இயக்குநர் மீரா கதிரவன் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

விதார்த், வெங்கட்பிரபு, கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’விழித்திரு’. மீரா கதிரவன் தயாரித்து இயக்கியுள்ள இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.

நவம்பர் 3-ல் வெளீயீடு என்று திட்டமிடப்பட்டது. ஆனால், நவம்பர் 2-ம் தேதி இரவு படத்தின் வெளியீடு சென்னை மழையால் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்கள்.

இந்நிலையில் இயக்குநர் மீரா கதிரவன், 'விழித்திரு' திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும் என்று ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தததால் குழப்பம் உண்டாது. இறுதிக்கட்ட பணப் பரிவர்த்தனையில் சிக்கியிருப்பதாகவும், மாலை காட்சியிலிருந்து திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகின.

'விழித்திரு' வெளியீடு குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை. தற்போதும் லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.

துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது.

நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சிரமங்களுக்கு மன்னிக்கவும். 'விழித்திரு' திரையரங்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆதரியுங்கள்.

இவ்வாறு மீரா கதிரவன் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x