Last Updated : 18 Nov, 2017 12:56 PM

 

Published : 18 Nov 2017 12:56 PM
Last Updated : 18 Nov 2017 12:56 PM

அனைத்து காவல் துறையினருக்கும் ‘தீரன்’ பிடிக்கும்: டிஜிபி ஜாங்கிட்

அனைத்து காவல் துறையினருக்கும் ‘தீரன்’ பிடிக்கும் என்று டிஜிபி ஜாங்கிட் தெரிவித்திருக்கிறார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஜிபி ஜாங்கிட் கூறியிருப்பதாவது:

இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. உண்மையில் அந்த பவாரியா குழுவை பிடிக்கும் திட்டத்துக்கு நாங்கள் தான் தலைமை வகித்தோம். எப்படி அந்த சம்பவங்கள் காவல்துறை பார்வையில் நடந்ததோ , அது அப்படியே படமாக வந்துள்ளது.

நடிகர் கார்த்தியையும், இயக்குநர் வினோத்தையும் ரொம்ப பாராட்ட வேண்டும்.ஆரம்பம் முதல் எப்படி பவாரியா திட்டம் செயல்படுத்தினோம். எப்படி பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் சம்பவங்கள் செய்தார்கள், அவர்களை நாங்கள் எப்படி பிடித்தோம்.அதில் இரண்டு பேரை எண்கவுன்டர் செய்தோம். பதிமூன்று பேரை உயிரோடு பிடித்தோம்.

அதே போன்று உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை சரியான முறையில் சேர்த்து செய்துள்ளார்கள். இப்படத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை. ரொம்ப கஷ்டபட்டு பவாரியாவுக்கு சென்று நடித்திருக்கிறார்கள்.

கமாண்டோ பயிற்சி எவ்வளவு அளித்திருப்பார்கள் என்று நினைத்தால், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குதிரை சவாரி, கமாண்டோ காட்சிகளை பார்க்கையில் சமீபத்தில் வந்த 'சோலோ’ படம் போல் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அருமையான தயாரிப்பு. அனைத்து காவல் துறையினருக்கும் இப்படம் பிடிக்கும்

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x