Last Updated : 31 Oct, 2017 07:06 PM

 

Published : 31 Oct 2017 07:06 PM
Last Updated : 31 Oct 2017 07:06 PM

சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும்: இயக்குநர் சேரன் நம்பிக்கை

இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று '6 அத்தியாயம்' இசை வெளியீட்டு விழாவில் சேரன் நம்பிக்கை தெரிவித்தார்.

'6 அத்தியாயம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பார்த்திபன், சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 அணிகளை அறிமுகப்படுத்தியிருப்பதற்குதான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம்.

புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் நாயகர்களை நினைத்து பயம் இருக்கிறது. ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும். அப்போது இந்த இளைஞர்களுக்குதான் எதிர்காலம். இனி சினிமாவின் நிலையை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x