Last Updated : 29 Oct, 2017 04:53 PM

 

Published : 29 Oct 2017 04:53 PM
Last Updated : 29 Oct 2017 04:53 PM

இளம் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார்

'தாயம்' படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 29

மார்ச் மாதத்தில் கண்ணன் ரங்கசாமி இயக்கத்தில் வெளியான படம் 'தாயம்'. ஒரே அறையில் எடுக்கப்பட்ட படம் என்ற ரீதியில் வரவேற்பைப் பெற்றது.

தனது அடுத்த கதைக்கு தயாராகி வந்த கண்ணன் ரங்கசாமி, செப்டம்பர் 23-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, கடும் போராட்டத்துக்குப் பிறகே அவரை காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஆனால், தொடர்ச்சியாக இருதயப் பிரச்சினை இருந்ததால், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கும் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மேலும் மோசமாகி கடந்த 15 நாட்களாக கோமா நிலையில் இருந்திருக்கிறார்.

இன்று (அக்டோபர் 29) காலை 5 மணிக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்படவே சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 29.

கண்ணன் ரங்கசாமியின் அப்பா - அம்மா இருவருமே காலமாகிவிட்டார்கள். சென்னையிலுள்ள மேன்ஷனில் இருந்துக் கொண்டு இயக்குநராக அறிமுகமானார். மேலும், எந்ததொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல், நியூயார்க்கில் திரைப்பட பயிற்சி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x