Last Updated : 31 Oct, 2017 12:57 PM

 

Published : 31 Oct 2017 12:57 PM
Last Updated : 31 Oct 2017 12:57 PM

செல்வராகவனோடு பணிபுரிய காத்திருக்கிறேன்: சூர்யா

செல்வராகவனோடு பணிபுரிய காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா தெரிவித்திருக்கிறார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும் என்றும், தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இச்செய்தியை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும். தீபாவளிக்கு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்வீட்டை மேற்கோளிட்டு இயக்குநர் செல்வராகவன் "பெருமைமிக்க இந்த படத்தில் பங்கேற்பதிலும், சிறந்த நடிகரை (சூர்யா) இயக்குவதிலும் மகிழ்ச்சி.." என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குநர் செல்வராகவன் ட்வீட்டை மேற்கோளிட்டு "திரைத்துறையின் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் (செல்வராகவன்) பணிபுரிய ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்!!" என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களையும் விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்கள்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x