Last Updated : 04 Oct, 2017 08:47 PM

 

Published : 04 Oct 2017 08:47 PM
Last Updated : 04 Oct 2017 08:47 PM

கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் நடிப்பேன்: ஆரவ்

கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக ஓவியாவுடன் இணைந்து நடிப்பேன் என்று ஆரவ் தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். இறுதியில் ஆரவ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சில நாட்கள் ஓய்விற்குப் பிறகு ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

அவற்றின் தொகுப்பு:

அடுத்த 10 நாட்களுக்குள், பிக்பாஸுக்குப் பிறகான எனது முதல் படத்தைப் பற்றி அறிவிக்கவுள்ளேன். இப்போதே அது குறித்து பேச ஆர்வமாக இருக்கிறேன். கூடிய விரைவில் சொல்கிறேன். ஓவியா எனக்கு மிக நல்ல நண்பர். பிக்பாஸ் இறுதிக்குப் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. எனவே, அவரை சந்திக்கும்போது கண்டிப்பாக ஒரு புகைப்படம் எடுத்து பதிவேற்றுகிறேன். கதைக்குத் தேவைப்பட்டால் கண்டிப்பாக அவருடன் இணைந்து நடிப்பேன்.

பிக்பாஸ் வீட்டை இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். சிலரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் பெற்றேன். சில நாட்களாக மொபைலை எடுக்கவில்லை. அதனால் தான் பிக்பாஸ் முடிந்தவுடன் என்னால் ஆன்லைன் வர முடியவில்லை. அதற்கு மன்னித்துவிடுங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இன்னும் ஓவியாவிடம் பேசவில்லை. பேசியபிறகு, அடுத்த நேரலையில் அதைப் பற்றி சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசிய பதிலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x