Last Updated : 22 Oct, 2017 02:17 PM

 

Published : 22 Oct 2017 02:17 PM
Last Updated : 22 Oct 2017 02:17 PM

கருத்து சுதந்திரம் இதுதானா? - ’மெர்சல்’ சர்ச்சை குறித்து இயக்குநர் பாண்டிராஜ்

கருத்து சுதந்திரம் இதுதானா? என்று ’மெர்சல்’ சர்ச்சை குறித்து இயக்குநர் பாண்டிராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தணிக்கைக் குழுவில் மத்திய, மாநில அரசுகளின் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் உள்ளே இருந்து, படத்தைப் பார்த்து விவாதித்த பிறகு தான் ஒப்புதல் அளிப்பார்கள். அப்படி வந்த படத்தின் வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்?. விட்டால் இனிமே ஊமைப்படம் தான் (பேசாப்படம்) எடுக்க வேண்டும் என்று சட்டமே போடுவார்கள் போல..?

கருத்து சுதந்திரம் இதுதானா? நாடு எங்கே செல்கிறது?

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x