திருவள்ளூரில் ஒரே இரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

திருவள்ளூரில் ஒரே இரவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
Updated on
1 min read

திருவள்ளூரில் ஒரே நாள் இரவில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருவள்ளூர் வடக்கு ராஜவீதியில் பாலாஜி என்பவர் பால் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் காலையில் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வசூல் பணம் ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதேபோல், அதே வடக்கு ராஜ வீதியில் பாண்டியன் ஸ்டோர் என்ற பெயரில் ரவிச்சந்திரன் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் 10-ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 8 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.

மேலும், திருவள்ளூர் பஜார் வீதியில் அனிதா ஸ்டோர் என்ற மளிகைக் கடையை திருவேங்கடம் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையிலும் கடந்த 10-ம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் 3 கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது, அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in