Published : 27 Dec 2022 06:32 AM
Last Updated : 27 Dec 2022 06:32 AM

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு தேர்வு

சென்னை: இந்திய அஞ்சல்துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை, அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள தலைமை அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் இதற்கான நேர் முகத் தேர்வு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சென்னை நகரில் வசிப்பவர் களுக்கும், ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். நேர் முகத் தேர்வுக்கு வரும்போது கல்வி, வயது உள்ளிட்ட சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும் என அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x