Published : 22 Oct 2022 06:40 AM
Last Updated : 22 Oct 2022 06:40 AM

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆள் தேர்வு

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இந்திய அஞ்சல் துறை சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-ல் இருந்து 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சென்னை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என சென்னை மத்திய கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x