Published : 21 Aug 2022 05:00 AM
Last Updated : 21 Aug 2022 05:00 AM

ஒசூர் டாடா எலெக்ட்ரானிக்ஸில் பணியாற்ற கள்ளக்குறிச்சியில் ஆக.26-ல் மகளிர் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 26-ம் தேதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தனியார் துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாதத்தின் 2 மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நடப்பு மாதத்தின் 4-ம் வெள்ளிக்கிழமையான வரும் 26-ம் தேதி ஒசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது, தங்கள் நிறுவனத்திற்கு பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிறுவனத்தில் பணிபுரிய 18 முதல் 20 வயதிற்குட்பட்ட 2021-2022 -ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

26-ம் தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 9 மணிக்கு இந்நிறுவனத்தின் மூலம் நடைபெறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். மாத ஊதியமாகரூ.15 ஆயிரம் வழங்கப்படும். மேலும் உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதியுடன் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளும் இந்நிறுவனத்தால் செய்து தரப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x