Published : 10 Aug 2022 04:37 AM
Last Updated : 10 Aug 2022 04:37 AM

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு பெண் காவலர்கள் தேர்வு

சென்னை: மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்தின்கீழ், ராணுவத்தில் காவலர் பிரிவுக்கு பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நவ.27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

வேலூரில் உள்ள காவலர் ஆள்சேர்ப்பு பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று (ஆக.9) தொடங்கி செப்.7-ம் தேதி நிறை வடைகிறது. தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை நவ.1 முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னையில் ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் 044-25674924 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x