Published : 01 Aug 2022 07:27 AM
Last Updated : 01 Aug 2022 07:27 AM

நவம்பர் 6-ல் நில அளவையாளர் பணித் தேர்வு

சென்னை: தமிழகத்தில் நில அளவையாளர் (798), வரைவாளர் (236), அளவர் மற்றும் உதவி வரைவாளர் (55) என 1,089 காலிப்பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வு நவ.6-ல் நடக்கிறது. காலையில் முதல்தாள் தேர்வும், மதியம் 2-ம் தாள் தேர்வும் நடைபெறும். www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய இணையதளங்கள் வழியாக ஆக.27-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய செப்.1 முதல் 3-வரை அவகாசம் வழங்கப்படும்.

முதல்தாள் 300 மதிப்பெண்ணுக்கும், 2-ம் தாளில் தமிழ் தகுதித் தேர்வு 150 மதிப்பெண்ணுக்கும், பொதுப் பாடம் 150 மதிப்பெண்ணுக்கும் நடக்கும். தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x