Published : 25 May 2022 09:56 AM
Last Updated : 25 May 2022 09:56 AM

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் சென்னையில் வரும் 27-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகள் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’யாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து, வரும் 27-ம் தேதி (வெள்ளி) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.

இந்த முகாம், கிண்டி தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இதில், 8, 10, பிளஸ் 2 வகுப்புகள், ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோபடித்தவர்கள், கலை அறிவியல், மற்றும் தொழில்நுட்பபட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

25 நிறுவனங்கள்

இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. எனவே, இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x