திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்
Updated on
1 min read

திருவள்ளூர்: தமிழக அரசின் வேலைவாய்ப்பு,பயிற்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிதோறும் சிறு அளவிலான, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆட் சேர்ப்பு முகாம் ஆகியவை நடைபெற உள்ளன.

இம்முகாமில், பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள்நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள், பயிற்சியிடங்களுக்கு, 10- ம் வகுப்பு, 12-ம் வகுப்புமற்றும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐ.டி.ஐ. முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன.

எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட் சேர்ப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in