Published : 17 Sep 2020 09:30 PM
Last Updated : 17 Sep 2020 09:30 PM

10,978 அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு: ரூ.52 ஆயிரம் வரை சம்பளம்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழகத்தில் காலியாக உள்ள 10,978 பணியிடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளதாகச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

காவல்துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு முறை:
* எழுத்துத்தேர்வு (80 மதிப்பெண்கள்) - டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட வாரியாகத் தேர்வு நடைபெறும்.
* உடற்கூறு அளத்தல் (தகுதித் தேர்வு)
* உடல் தகுதித்தேர்வு (தகுதித் தேர்வு)
* உடற்திறன் போட்டிகள் (15 மதிப்பெண்கள்)
* சிறப்பு மதிப்பெண்கள் (5 மதிப்பெண்கள்)

சம்பளம்:

ரூ.18,200 முதல் ரூ.52,900 வரை

கல்வித் தகுதி:

10-ம் வகுப்புத் தேர்ச்சி (தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை)

எப்படி விண்ணப்பிப்பது?
www.tnusrbonline.org எனும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
செப்டம்பர் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 26 விண்ணப்பிக்கக் கடைசி நாள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnusrbonline.org/pdfs/CR_2020_Brochure.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x