

சென்னை: அஞ்சல்துறை சார்பில், சென்னைக் கோட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்களை நியமிக்க நாளை நேர்காணல் நடைபெறுகிறது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை நியமிக்க உள்ளது.
10-ம் வகுப்பில் தேர்ச்சி: கல்வி தகுதியாக குறைந்தது 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 இருக்க வேண்டும். சுயதொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்த பகுதி பற்றிநன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் ஆகியவை விரும்பத்தக்க தகுதிகள் ஆகும்.
முகவரி மற்றும் கல்விச் சான்று: இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை. நேர்காணலில் பங் கேற்க விரும்புபவர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப் படம், அசல் மற்றும் இரண்டு நகல் -வயது, முகவரி மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், சென்னை- 600 016-ல் உள்ள அலுவலகத்தில் நாளை (30-ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.