Published : 24 Nov 2023 04:02 AM
Last Updated : 24 Nov 2023 04:02 AM

தொழிலாளர் துறை சார்பில் புதுச்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலை வாய்ப்பக இயக்குநர் மாணிக்க தீபன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம் சார்பில் நாளை (நவ.25) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு தனியார் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

தொழிலாளர் துறை வேலை வாய்ப்பு அலுவலகம் வளாகத்தில் நடைபெறும் இம்முகாமில் 1,100-க்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்காக 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பட்டய படிப்பு ( பொறியியல், கலை, பார்மசி, நர்சிங், வணிக வியல், அறிவியல் ), எம்பிஏ மற்றும் இதர பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் பங்கு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவர்கள், தங்களது தற்குறிப்பு ( Resume ) மற்றும் கல்வித் தகுதிக்கான உண்மை, நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x