

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களுக்கான நேர்காணல் வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நேர்காணலில் கலந்துகொள்ள தேவையான தகுதிகளை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின், எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017, என்ற முகவரியில் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 24.07.2023 அன்று 10 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தேவையான தகுதிகள்:
இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.