ரூ.4,000 கோடி முதலீடு: டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு

ரூ.4,000 கோடி முதலீடு: டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பாரத்​பென்ஸ் வர்த்தக வாக​னங்​களைத் தயாரித்து வரும் டெய்ம்​லர் இந்​தியா கமர்​ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசி​வி) நிறுவனம், தனது அடுத்​தகட்ட வளர்ச்சி பயணத்​தின் ஒரு பகுதியாக தமிழகத்​தில் ரூ.4,000 கோடி கூடு​தல் முதலீடு செய்யவுள்​ள​தாக அறி​வித்​துள்​ளது.

இதன் மூலம், இந்​தி​யா​வில் அந்​நிறு​வனத்​தின் ஒட்​டுமொத்த முதலீடு ரூ.14,500 கோடியை தாண்​டி​யுள்​ளது.

இது தொடர்​பாகத் தமிழக அரசுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் டெய்ம்​லர் இந்​தியா கையெழுத்​திட்​டுள்​ளது. இந்த புதிய முதலீட்டின் மூலம் பாரத்​பென்ஸ் வாக​னங்​களின் புதிய தயாரிப்பு மேம்​பாடு, உற்​பத்தி விரி​வாக்​கம், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாடு, உள்​கட்​டமைப்பு வசதி​கள் ஆகியவை மேம்​படுத்​தப்​பட​வுள்​ளன.

மேலும், இந்த முதலீட்​டுத் திட்​டத்​தின் மூலம் தமிழகத்​தில் சுமார் 400 பேருக்​கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும். சென்னை அருகே ஒரகடத்​தில் 400 ஏக்​கர் பரப்​பள​வில் ஒருங்​கிணைந்த உற்​பத்தி மற்​றும் ஆராய்ச்சி மையத்​தைக் கொண்டுள்ள டெய்ம்​லர் நிறு​வனத்​தில், தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

பாரத்​பென்ஸ் வாக​னங்​களின் உதிரி​பாகத் தேவை​யில் 92 சதவீதத்தை தமிழகத்​தைச் சேர்ந்த 400-க்​கும் மேற்​பட்ட உள்​ளூர் விநி​யோகஸ்​தர்​கள் மூலமே இந்​நிறு​வனம் பூர்த்தி செய்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

ரூ.4,000 கோடி முதலீடு: டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
அருணாச்சலில் சீன ஆக்கிரமிப்புகள் இல்லை: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in