பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பின்னடைவு: மோடிக்கு பெர்ன்ஸ்டீன் நிறுவனம் எச்சரிக்கை

பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பின்னடைவு: மோடிக்கு பெர்ன்ஸ்டீன் நிறுவனம் எச்சரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யப் பொருளா​தா​ரம் அண்​மைக் கால​மாக அடைந்​துள்ள வளர்ச்​சி​யைத் தக்க வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால், வேலை​வாய்ப்பு மற்​றும் உற்​பத்​தித் துறை​யில் இந்​தியா அதிரடி​யான கட்​டமைப்​புச் சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள வேண்​டியது அவசி​யம் என்று பெர்ன்​ஸ்​டீன் ஆய்வு நிறு​வனம் எச்​சரித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடிக்கு அந்த நிறு​வனம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 6 ஆண்​டு​களில் கொள்கை முடிவு​கள் சரி​யான திசை​யில் இருந்​த​தால், பொருளா​தார நிலைத்​தன்மை மற்​றும் ஜிடிபி தரவரிசை​யில் இந்​தியா முன்​னேற்​றம் கண்​டுள்​ளது.

எனினும், இந்த அண்​மைக்​கால வெற்​றிகளைக் கண்டு நாம் மனநிறைவு அடைந்​து​விடக் கூடாது. உலகளா​விய விநி​யோகச் சங்​கிலி மாற்​றமடைந்து வரும் வேளை​யில், இந்​தியா தனது சீர்​திருத்​தங்​களை வேகப்​படுத்​து​வது அவசி​யம். இல்​லா​விட்​டால் இது​வரை ஈட்​டிய பலன்​களை இந்​தியா இழக்க நேரிடும்.

இந்​தி​யா​வின் நடுத்தர வர்க்​கத்தை உயர்த்​திய சேவைத் துறைக்​கு, தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் பெரும் சவாலாக உரு​வெடுத்​துள்​ளது. தானி​யங்கி முறை​யி​னால் நடுத்தர வர்க்க வேலை​வாய்ப்​பு​கள் பறி​போகும் அபா​யம் உள்​ளது. இந்​தியா இத்​தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​துபவ​ராக மட்​டுமே இல்​லாமல், அதை உரு​வாக்​குபவ​ராக​வும் மாற வேண்​டும்.

நாட்​டின் 45 சதவீத உழைப்​பாளர்​கள், விவ​சா​யத் துறை​யில் ஈடு​பட்​டுள்ள போதி​லும், ஜிடிபி-க்கு அவர்​களின் பங்​களிப்பு வெறும் 15 சதவீத​மாக மட்​டுமே உள்​ளது. எனவே, விவ​சாயச் சட்​டங்​கள் திரும்​பப் பெறப்​பட்​டாலும், இத்​துறை​யில் சீர்​திருத்​தங்​கள் இன்றி வளர்ச்​சியை எட்ட முடி​யாது. வெறும் கடன் தள்​ளு​படிகளும், மானி​யங்​களும் நிரந்​தரத் தீர்​வா​காது.

அதே​போல், பெட்​ரோலி​யத் தேவை​யில் 88 சதவீதத்தை இறக்​கும​தியை மட்​டுமே நம்​பி​யிருப்​பது பலவீன​மானது. மின்​சார வாக​னத் தொழில்​நுட்​பத்​துக்கு விரை​வாக மாறா​விட்​டால், மீண்​டும் வெளி​நாட்​டுத் தொழில்​நுட்​பங்​களைச் சார்ந்​திருக்​கும் நிலை இந்​தி​யா​வுக்கு ஏற்​படும்.

பல்​வேறு மாநில அரசுகள் அறிவிக்​கும் நேரடிப் பணப் பரி​மாற்​றத் திட்​டங்​களுக்​காக ஆண்​டுக்கு ரூ.1.7 லட்​சம் கோடி முதல் ரூ. 2.5 லட்​சம் கோடி வரை செல​விடப்​படு​கிறது. இது போன்ற செல​வினங்​கள் உள்​கட்​டமைப்பு முதலீடு​களைக் குறைத்​து, பணவீக்​கத்தை அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது. வளர்ந்து வரும் ஒரு நாட்​டின் பொருளா​தா​ரத்​துக்கு இது நல்​லதல்ல.

ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுத் துறைக்​கான இந்​தி​யா​வின் முதலீடு ஜிடிபி-​யில் 0.6 சதவீத​மாக மட்​டுமே உள்​ளது. இது உலக நாடு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் மிகக் குறைவு. இந்​தி​யா​விடம் மூலதனம், திறமை, ஆர்​வம் ஆகிய​வற்​றுக்​குக் குறை​வில்​லை. ஆனால் கடின​மான முடிவு​களை உடனுக்​குடன் எடுக்​கும் துணிச்​சலே இப்​போதைய தேவை. இவ்​வாறு அந்த கடிதத்​தில் பெர்ன்​ஸ்​டீன் நிறு​வனம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.

பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பின்னடைவு: மோடிக்கு பெர்ன்ஸ்டீன் நிறுவனம் எச்சரிக்கை
சஞ்சு சாம்சன் அதிரடி சதம்: மும்பையை துவம்சம் செய்த சிஎஸ்கே

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in