

தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்த அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 1 மற்றும் 2-வது அலகுகளில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 3, 4 மற்றும் 5-வது அலகுகள் மூலம் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று 5-வது அலகில் உள்ள டர்பை னில் பழுது ஏற்பட்டதால் 5-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 அலகுகளை யும் சேர்த்து 630 மெகா வாட் மின்சார் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது.
ஐந்தாவது அலகில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.