விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடை: பயணிகளின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடை: பயணிகளின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: ​வி​மானப் பயணங்​களின்​போது பவர் பேங்க் போன்ற சார்​ஜர் சாதனங்​களை பயன்​படுத்​து​வதற்கு இந்​திய விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டிஜிசிஏ) தடை​ வி​தித்​துள்​ளது.

புதுப்​பிக்​கப்​பட்ட விமானப் பாது​காப்பு வழி​காட்​டு​தல்​களை டிஜிசிஏ வெளி​யிட்​டுள்​ளது. அதன்​ கீழ் இந்த புதிய அறி​வுறுத்​தல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து டிஜிசிஏ​ வெளியிட்டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்ப​தாவது: விமானப் பயணி​கள் இனி பவர் பேங்​கு​களை பயன்​படுத்த அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். இதில், விமான இருக்​கை​யின் அரு​கே​யுள்ள மின் பிளக்​கு​களில் பவர் பேங்கை சொருகி மொபைல்​போன், லேப் ​டாப்பை சார்ஜ் செய்​வதும் அடக்​கம். பவர் பேங்க்​கு​கள் மற்​றும் அது​போன்ற லித்​தி​யம் பேட்​டரி​களை கைப்​பைகளில் மட்​டுமே எடுத்​துச் செல்ல வேண்​டும்.

அதனை மேல்​பக்க கம்​பார்ட்​மன்ட்​களில் வைக்கக் கூடாது என்று விதி​முறை​களில் கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. லித்​தி​யம்​-அயன் பேட்​டரி​களால் ஏற்​படும் தீ விபத்​துகளை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச விமான நிறுவனங்​கள் ஏற்​கெனவே இதேபோன்ற நடவடிக்​கைகளை எடுத்துள்ளன. இவ்​வாறு சுற்​றறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளது.

பயணி​களின் இணக்​கத்தை உறுதி செய்​வதற்​கும், விமானப் பயணத்​தின்​போது பாது​காப்பு குறித்த விழிப்​புணர்வை அதி​கரிப்​ப​தற்​கும், விமான நிறு​வனங்​கள் பயணத்​துக்கு முந்​தைய அறிவிப்பு மற்​றும் விமானப் பணி​யாளர் விளக்​கங்​கள் மூலம் இந்த புதிய தடையை அமல்​படுத்த தொடங்​கி​யுள்​ளன.

அதன்​படி, விமானப் பயணி​கள் இனி கையடக்க சார்​ஜர்​களை விமானத்​தில் கொண்டு செல்லலாம். ஆனால் விமானப் பயணத்​தின்​போது அவற்றை பயன்​படுத்த முற்​றி​லும் தடை​விதிக்கப்பட்டுள்​ளது. இதன் பொருள், விமானப் பயணத்​தின்​போது தொலைபேசிகள், டேப்​லெட்​டு​கள் அல்​லது வேறு எந்த கருவி​களை​யும் சார்ஜ் செய்ய பவர் பேங்​கு​களை பயன்​படுத்த முடி​யாது என்​ப​தாகும்.

மேலும், இந்த சாதனங்​களை சார்ஜ் செய்ய அல்​லது இயக்குவதற்கு விமான இருக்​கை​யின் அருகே மின் பிளக்​கு​களை பயன்​படுத்​து​வதற்​கும் இந்த விதி பொருந்​தும். இந்த புதிய விதி​முறை மூலம் விமானப் பயணி​கள் இனி தங்​களது பயணத்​துக்கு முன்​பாக மொபைல்​போன், லேப்​ டாப்​களில் தேவை​யான அளவு சார்ஜ் இருப்​பதை உறு​தி​ செய்து கொள்​ள வேண்​டிய கட்​டா​யம்​ ஏற்​பட்​டுள்​ளது.

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடை: பயணிகளின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை
சுற்றுச்சூழல் போட்டியில் வென்ற பள்ளிகளுக்கு பரிசு: துறை செயலர் சுப்ரியா சாஹூ வழங்கினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in