1,650 கால்பந்து மைதானங்களுக்கு இணையான நவி மும்பை விமான நிலையம் தொடக்கம்

1,650 கால்பந்து மைதானங்களுக்கு இணையான நவி மும்பை விமான நிலையம் தொடக்கம்
Updated on
1 min read

மும்பை: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் நேற்று பயணி​கள் சேவை தொடங்​கப்​பட்​டது. இந்த விமான நிலை​யம், 1,650 கால்பந்து மைதானங்​களுக்கு இணை​யானது.

மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ் சர்​வ​தேச விமான நிலை​யம் செயல்​படு​கிறது. அங்கு விமான பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால் நவி மும்பையில் புதிய விமான நிலை​யம் கட்ட 2007ம் ஆண்​டில் மத்திய அரசு அனு​மதி வழங்​கியது. கடந்த 2018-ம் ஆண்​டில் கட்டுமான பணி​கள் தொடங்​கப்பட்​டன.

முதலில் ஜிவிகே நிறு​வனம் கட்​டு​மான பணி​களை மேற்​கொண்​டது. கடந்த 2019-ல் செப்​டம்​பர் மாதம் எல் அண்ட்டி நிறு​வனத்​திடம் கட்​டு​மான பணி​கள் ஒப்​படைக்​கப்​பட்​டன. பின்​னர் கடந்த 2021-ம் ஆண்​டில் அதானி குழு​மத்​திடம் கட்​டு​மான பணி​கள் அளிக்​கப்​பட்​டன.

நவி​ மும்பை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் மொத்​தம் 4 முனையங்​கள் கட்​டப்பட உள்​ளன. முதலா​வது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்​ளன. இந்த முனையத்தை பிரதமர் நரேந்​திர மோடி கடந்த அக்​டோபரில் திறந்​து ​வைத்​தார்.

இதைத் தொடர்ந்து நவி மும்பை விமான நிலை​யத்​தில் நேற்று பயணி​கள் சேவை தொடங்​கப்​பட்​டது. கர்​நாடக தலைநகர் பெங்களூரு​வில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு இண்டிகோவின் முதல் பயணி​கள் விமானம் நவி மும்​பை​யில் தரை​யிறங்​கியது. அந்த விமானத்​துக்கு தண்​ணீரை பீய்ச்சி அடித்து உற்​சாக வரவேற்பு அளித்தனர்.

பின்​னர் நவி மும்பை விமான நிலை​யத்​தில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு ஹைத​ரா​பாத்​துக்கு முதல் பயணி​கள் விமானம் புறப்​பட்​டது. வரும் பிப்​ர​வரி மாதம் நவி மும்பை விமான நிலை​யம் 100 சதவீதம் செயல்​படும் என்று விமான போக்​கு​வரத்து ஆணைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் மேலும் கூறிய​தாவது: நவி மும்பை விமான நிலை​யம், இந்​தி​யா​வின் தேசிய மலரான தாமரை​யின் வடி​வில் கட்​டப்​பட்டு உள்​ளது. இதன் மொத்த பரப்​பளவு 2,866 ஏக்கர். அதாவது 1,650 கால்​பந்து மைதானங்​களுக்கு இணை​யாக விமான நிலை​யம் அமைந்​துள்​ளது. முதலா​வது முனை​யத்தை கட்ட ரூ.19,650 கோடி செலவு செய்​யப்​பட்​டிருக்​கிறது. இந்த முனையத்​தின் மூலம் ஆண்​டுக்கு 2 கோடி பயணி​களை கையாள முடி​யும்.

வரும் 2028ம் ஆண்​டில் 2-வது முனை​யம், வரும் 2032ம் ஆண்​டில் 3, 4-வது முனை​யங்​கள் அடுத்​தடுத்து பயன்​பாட்​டுக்கு வரும். நான்கு முனை​யங்​களும் முழு​மை​யாக பயன்​பாட்​டுக்கு வரும்​போது ஆண்​டுக்கு 9 கோடிக்​கும் அதி​க​மான பயணி​களை கையாள முடியும். இங்​கிருந்து ஒரே நாளில் 300-க்​கும் மேற்​பட்ட விமான சேவை​களை இயக்க முடி​யும். இந்த விமான நிலை​யத்​தின் மூலம் நாட்​டின் பயணி​கள், சரக்கு போக்​கு​வரத்து மேம்​படும். நாட்​டின் பொருளா​தா​ரம் வளர்ச்சி அடை​யும்​. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1,650 கால்பந்து மைதானங்களுக்கு இணையான நவி மும்பை விமான நிலையம் தொடக்கம்
“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” - பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in