புதிய தொழிலாளர் சட்டத்தால் 77 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்: எஸ்பிஐ

புதிய தொழிலாளர் சட்டத்தால் 77 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்: எஸ்பிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: எஸ்​பிஐ ஆய்​வறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மத்​திய அரசு அமல்​படுத்​தி​யுள்ள புதிய தொழிலா​ளர் சட்​டத்தின் மூலம், குறுகிய கால அடிப்​படை​யில் வேலை​யின்மை விகிதம் 1.3% வரை குறை​யும். நடுத்தர கால அளவில் இந்த புதிய சட்டத்தால் 77 லட்​சம் கூடு​தல் வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும்.

மேலும், முறைப்​படுத்​தப்​பட்ட தொழிலா​ளர்​களின் பங்கு தற்போது 60.4 சதவீத​மாக உள்ள நிலை​யில் இந்த சட்​டம் அமலுக்கு வந்​துள்​ளதையடுத்து அதன் பங்கு 75.5 சதவீத​மாக உயரும். நாட்​டின் தொழிலா​ளர் சந்​தையை வலுப்​படுத்​தும் விதமாக சமூக துறை பாது​காப்பு 85 சதவீத​மாக அதி​கரிக்​கும்.

சேமிப்பு விகிதம் சுமார் 30 சதவீத​மாக இருக்​கும் நிலை​யில், இந்த சீரமைப்பு நடவடிக்​கை​யால் தனி நபர் நுகர்வு நாளொன்​றுக்கு ரூ.66 அதி​கரிக்​கும். இது, ஒட்​டுமொத்த நுகர்வை நடுத்தர கால அடிப்​படை​யில் ரூ.75,000 கோடி அளவுக்கு ஊக்​குவிக்​கும். உள்நாட்டு செல​வினம் அதி​கரிப்​ப​தால் நாட்​டின் பொருளா​தார வளர்ச்சி வேகமெடுக்​கும். இவ்​வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் சட்டத்தால் 77 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்: எஸ்பிஐ
புதிய தொழிலாளர் சட்டம்... ஆதரவும் எதிர்ப்பும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in