பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிவு
பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமை​யாக சரிவடைந்​தது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது.

கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் ரூபாய் மதிப்பு சரிவு காரண​மாக இந்​திய பங்​குச் சந்​தைகள் இந்த வாரத்​தின் முதல் நாளான திங்​கள்​கிழமை சரிவை சந்​தித்​தது. இந்​நிலை​யில் 2-வது நாளான நேற்​றும் கடும் வீழ்ச்​சி​யடைந்​தது. வர்த்தக முடி​வில் மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559-ல் நிலை பெற்​றது.

சரிவுக்​கான 5 முக்​கிய காரணங்​கள்

தேசிய பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் நிப்டி 436 புள்​ளி​கள் சரிந்து 23,379-ல் நிலை பெற்​றது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது. சந்தை​யின் இந்​தச் சரிவுக்கு மிக முக்​கிய​மான காரணங்​களில் ஒன்​று, அமெரிக்கா - ஈரான் இடையி​லான மோதலில் மீண்​டும் ஏற்பட்​டுள்ள நிச்​சயமற்ற தன்​மை​யாகும்.

மோதலை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக வாஷிங்​டன் முன்வைத்த சமீபத்​திய திட்​டத்தை ஈரான் நிராகரித்​ததைத் தொடர்ந்​து, அந்​நாட்​டுட​னான போர்​நிறுத்த ஒப்​பந்​தம் 'உயிர்காக்கும் கரு​வி' உதவி​யுடன் ஊசலாடிக் கொண்​டிருப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​தார். குறிப்​பாக, ஹார்​முஸ் ஜலசந்தி மீதான இறை​யாண்மை மற்​றும் போர் இழப்பீடு போன்ற ஈரானின் நிபந்​தனை​களை அமெரிக்கா ஏற்க மறுத்​துள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் தணி​யாத​தால், கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​படும் என்ற அச்​சம் எழுந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை ஒரு பேரலுக்கு 105 டாலர் என்ற அளவை மீண்​டும் தாண்​டி​யுள்​ளது. இது எரிபொருளை இறக்​குமதி செய்​யும் இந்​தி​யா​வைப் போன்ற நாடுகளுக்​குப் பெரும் சுமை​யாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் 95.55 ஆக வீழ்ச்​சி​யடைந்​தது.

கச்சா எண்​ணெய் விலை உயர்வு இந்​தி​யா​வின் பொருளாதாரத்தைப் பாதிக்​கும் என்ற கவலையே இதற்கு முக்கிய காரணம். அமெரிக்​கா​வின் 10 ஆண்​டு​கால கடன் பத்​திர லாபம் 4.423% ஆக உயர்ந்​துள்​ளது. கடன் பத்​திரங்​களில் லாபம் அதி​கரிக்​கும்​போது, முதலீட்​டாளர்​கள் பங்​குச்​சந்​தை​யில் இருந்து பணத்தை எடுத்து பாது​காப்​பான பத்​திரங்​களில் முதலீடு செய்​யத் தொடங்​கு​வார்​கள். இது பங்​குச்​சந்​தைக்கு அழுத்​தத்​தைக் கொடுக்​கிறது.

வெளி​நாட்டு நிறுவன முதலீட்​டாளர்​கள் (எப்​ஐஐ) தொடர்ந்து இந்தியப் பங்​கு​களை விற்று வரு​கின்​றனர். கடந்த திங்​கட்​கிழமை மட்​டும் சுமார் ரூ.8,438 கோடி மதிப்​பிலான பங்​கு​களை அவர்​கள் விற்​றுள்​ளனர்​. இது தொடர்​ந்​து ஐந்​​தாவது வர்​த்​தக தின​மாக நீடிக்கிறது. இது​போன்​ற ​காரணங்​களால்​ இந்​தி​ய பங்​குச்​ சந்தைகள்​ கடும்​ சரிவை சந்​தித்​து வருகின்​றன.

பங்குச் சந்தை முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in