இந்திய கைவினை கவுன்சில் சார்பில் ‘கைவினை சந்தை 2026’ கண்காட்சி தொடக்கம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்ட கைவினை சந்தையில், இந்திய கைவினை கவுன்சில் சார்பில் அரங்கம் அமைத்துள்ள பல்வேறு மாநில கலைஞர்களுடன், கவுன்சில் தலைவர் விசாலாட்சி ராமசுவாமி உள்ளிட்டோர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்ட கைவினை சந்தையில், இந்திய கைவினை கவுன்சில் சார்பில் அரங்கம் அமைத்துள்ள பல்வேறு மாநில கலைஞர்களுடன், கவுன்சில் தலைவர் விசாலாட்சி ராமசுவாமி உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: இந்​திய கைவினைக் கவுன்​சில் சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்ட ‘கை​வினை சந்தை 2026’ கண்காட்சி தொடக்க விழா சென்னை நுங்​கம்​பாக்​கம் வள்​ளுவர் கோட்​டத்​தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கவுன்​சில் தலை​வர் விசாலாட்சி ராமசு​வாமி கண்காட்சியை திறந்​து​வைத்​துப் பார்​வை​யிட்​டார். கவுன்​சிலின் கண்காட்சிப் பொறுப்​பாளர்​கள் இபா கபூர், ஆஷா ரவி ஆகியோர் முன்​னிலை வகித்​தனர்.

கண்காட்சி குறித்து இபா கபூர் கூறிய​தாவது: நாடு முழு​வதும் உள்ள கைவினைக் கலைஞர்​களுக்​கு, அவர்​களின் உற்​பத்​திப் பொருட்​களை சந்​தைப்​படுத்​து​வது சிரம​மாக உள்​ளது.

இதைக் கருத்​தில் கொண்​டு, இந்​திய கைவினைக் கவுன்​சில் சார்​பில், கைவினைக் கலைஞர்​களின் உற்​பத்​திப் பொருட்​களை சந்​தைப்​படுத்​தி, அவர்​களின் வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் இந்​தக் கண்காட்சி நடத்​தப்​படு​கிறது. வரும் 17-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியைப் பார்​வை​யிடலாம்.

ராஜஸ்​தான், குஜ​ராத், ஒடி​சா, உத்தரப் பிரதேசம், தெலங்​கா​னா, கர்​நாடகா உள்​ளிட்ட 25-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களின் கலாச்​சா​ரத்​தைப் பிர​திபலிக்​கும் வகை​யில் 64 விற்​பனை அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவற்​றில் மண், கல், மரம், தோல், பருத்​தி, சணல் மற்​றும் காகிதம் ஆகிய​வற்​றைக் கொண்டு தயாரிக்​கப்​பட்ட கைவினைப் பொருட்​கள், வீட்டு அலங்​காரப் பொருட்​கள், காலணி​கள், தரை விரிப்​புகள், மரத்​தால் செய்​யப்​பட்ட சுவாமி சிலைகள், பட்டு மற்​றும் பருத்​தி, எம்​பி​ராய்​டரி புட​வை​கள், ரெடிமேடு ஆடைகள், சுடி​தார் போன்ற துணி​கள் உள்​ளிட்​டவை விற்​பனைக்கு காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இந்​தக் கண்காட்சியில் ரூ.100 முதல் ரூ.65 ஆயிரம் வரையி​லான பொருட்​கள் விற்​பனைக்கு கிடைக்​கின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்ட கைவினை சந்தையில், இந்திய கைவினை கவுன்சில் சார்பில் அரங்கம் அமைத்துள்ள பல்வேறு மாநில கலைஞர்களுடன், கவுன்சில் தலைவர் விசாலாட்சி ராமசுவாமி உள்ளிட்டோர்.</p></div>
கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in