தமிழகம், ஆந்தி​ரா, கோவா மாநிலங்களில் உள்ள 10 கோ- ஆப்டெக்ஸ் விற்பனை கடைகளை மூட முடிவு

கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர்​கள் சங்​கம் கண்​டனம்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

நாகப்பட்டினம்: தமிழகம், ஆந்​தி​ரா, கோவா ஆகிய மாநிலங்​களில் உள்ள 10 கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​களை அடுத்​தடுத்து மூட தமிழ்​நாடு அரசின் கைத்​தறித் துறை முடி​வெடுத்​துள்​ளதற்கு கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர்​கள் சங்​கம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

நாகை​யில் கோ-ஆப்​டெக்ஸ் ஊழியர்​கள் சங்​கத்​தின் பொதுப் பேர​வைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​துக்​குத் தலைமை வகித்த சங்க சிறப்​புத் தலை​வர் பாரதி செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: கோ-ஆப்​டெக்ஸ் கடைகள் தமிழகம், டெல்​லி, மகா​ராஷ்டிரா உட்பட 15 மாநிலங்​களில் இயங்கி வரு​கின்​றன.

தற்​போது 145 கடைகள் உள்ள நிலை​யில், தவெக அரசு தமிழகத்​தில் 4, ஆந்​தி​ரா​வில் 5, கோவா​வில் 1 என மொத்​தம் 10 கோ-ஆப்​டெக்ஸ் விற்​பனை நிலை​யங்​களை மூட முடி​வெடுத்​துள்​ளது. இவற்றை மூடி​னால், ஊழியர்​களின் நிலை என்​ன​வாகும் என அரசு சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும்.

மேலும், கோ-ஆப்​டெக்ஸ்​ஸில் ஜவுளி வாங்கும் வாடிக்​கை​யாளர்​களுக்குத் துணிப்பை கூட தராமல், காகிதத்​தில் மடித்​துத் தர நிர்​வாகம் அறி​வுறுத்​துகிறது. இப்​படி​யாக வாடிக்​கை​யாளர்​கள் கோ-ஆப்​டெக்ஸ் கடைகளுக்கு வராமல் இருக்க என்​னென்ன வழிகள் உண்டோ அனைத்​தை​யும் கடைபிடிக்க நிர்​பந்​திக்​கப்​படு​கிறது.

கோ-ஆப்டெக்ஸ் துணி​களுக்கு ஜிஎஸ்டியை மத்​திய அரசு ரத்து செய்ய வேண்​டும். ஈரோட்​டில் கைத்​தறி துறைக்கு சொந்​த​மாக உள்ள ரூ.500 கோடி நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: முதல்வர் விஜய் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in