சென்னை துறைமுகத்தின் 4 புதிய திட்டங்கள்: மத்திய கப்பல்துறை செயலர் தொடங்கி வைத்தார்

சென்னை துறைமுகத்தின் 4 புதிய திட்டங்கள்: மத்திய கப்பல்துறை செயலர் தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

சென்னை: சென்னை துறை​முகத்​தில் நான்கு புதிய திட்​டங்​களை, மத்​திய கப்பல்துறை செயலர் விஜய்​கு​மார் தொடங்கி வைத்​தார்.

சென்னை துறை​முகம், நாட்​டின் 3-வது பெரிய துறை​முக​மாக இருக்​கிறது. இந்த துறை​முகத்​தில் 24 கப்​பல்​கள் நிறுத்​தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்​துள்​ளது.

இந்த துறை​முகத்​தில் பல்​வேறு புதிய திட்​டப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதற்​கிடையே, மத்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை செயலர் விஜயகு​மார் நேற்​று​முன்​தினம் சென்னை துறை​முகத்​தில் ஆய்வு மேற்​கொண்​டார்.

துறை​முகத்​தின் செயல்​பாடு மற்​றும் நிதி செயல் திறன்கள், வளர்ச்சி திட்​டங்​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதையடுத்​து, சென்னை துறை​முகத்​தில், அந்​த​மான் மற்​றும் நிக்​கோ​பார் பயணி​கள் முனை​யம், கப்​பல் போக்​கு​வரத்து கண்​காணிப்பு அமைப்பு உட்பட ரூ.54.27 கோடி மதிப்​பிலான நான்கு புதிய திட்​டங்​களை தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்​வின் போது, சென்னை துறை​முக ஆணை​யத் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன் உட்பட அதி​காரி​கள் பலர் உடனிருந்​தனர்​.

சென்னை துறைமுகத்தின் 4 புதிய திட்டங்கள்: மத்திய கப்பல்துறை செயலர் தொடங்கி வைத்தார்
தைப்பூசம், வார இறுதி நாட்களை முன்னிட்டு வெள்ளி, சனியில் 1,005 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in