இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியாகிறது

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியாகிறது
Updated on
1 min read

புதுடெல்லி: தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தைகளின் முடிவு​களை இந்​தி​யா​வும், ஐரோப்​பிய யூனியனும் நாளை அறிவிக்​க​வுள்​ளன. இருதரப்பு பொருளா​தா​ரத்தை மேம்​படுத்​து​வது​தான் இந்த ஒப்​பந்​தத்​தின் நோக்​கம்.

இந்​தியா மற்​றும் ஐரோப்​பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பான பேச்​சு​வார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்​கியது. 18 ஆண்​டு​களுக்கு பிறகு இந்த ஒப்​பந்​தம் முடிவடை​யும் நிலையை எட்​டி​யுள்​ளது. இந்​தியா இது​வரை கையெழுத்​திட்ட ஒப்​பந்​தங்​களில் இது முதன்​மை​யானது என மத்​திய வர்த்தக மற்​றும் தொழில்​ துறை அமைச்​சர் பியூஷ் கோயல் கூறி​யுள்​ளார். இந்த ஒப்​பந்​தம் குறித்த பேச்​சு​வார்த்​தை​யின் முடிவு இந்​தி​யா-ஐரோப்​பிய யூனியன் உச்சி மாநாட்​டில் அறிவிக்​கப்​பட​வுள்​ளது.

ஐரோப்​பிய ஆணைய தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன், 4 நாள் பயண​மாக இந்​தியா வந்​துள்​ளார். ஐரோப்​பிய கவுன்​சில் தலை​வர் ஆன்​டனியோ காஸ்டா மற்​றும் உர்​சுலா வான் டெர் ஆகியோர் உச்​சி​மா​நாடு தொடர்​பாக பிரதமர் மோடி​யுடன் நாளை பேசவுள்​ளனர். தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் பேச்​சு​வார்த்தை முடிவு​களை இந்​தியா மற்​றும் ஐரோப்பிய யூனியன் இந்த வாரம் அறிவிக்​கும். அதன்​பின் இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்.

இந்த ஒப்​பந்​தத்​துக்கு இங்​கிலாந்து நாடாளு​மன்​றம், இந்​தி​யா​வில் மத்​திய அமைச்​சர​வை​யின் ஒப்​புதல் தேவை. இதை அமல்​படுத்த சில காலம் ஆகும்.

இந்த ஒப்​பந்​தம் மூலம் இந்​தி​யா​வும், ஐரோப்​பிய யூனியனும் இறக்​குமதி வரியை 90 சதவீதத்​துக்கு மேல் குறைக்​கும். ஜவுளி மற்​றும் காலணி தயாரிப்பு துறை​யில் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அமலானவுடனே வரி​கள் உடனடி​யாக குறைந்து விடும். சில பொருட்​களுக்கு படிப்​படி​யாக வரி​கள் குறைக்​கப்​படும்.

தொலை​தொடர்​பு, போக்​கு​வரத்​து, ஆடிட்​டிங் போன்ற துறை​களின் சேவை​களில் வர்த்​தகத்தை ஊக்​குவிக்க விதி​முறை​களை தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் நீக்​கும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தே.ஜ கூட்​டணி அரசு ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, ஓமன், நியூசிலாந்​து, ஐக்​கிய அரபு அமீரகம், மொரீசி​யஸ் உட்பட 7 ஒப்​பந்​தங்​களை தே.ஜ கூட்​டணி அரசு இறுதி செய்​துள்​ளது. ஐரோப்​பிய யூனியன் கூட்​டமைப்​பில் 27 வளர்ந்த நாடு​கள் உள்​ள​தால், இந்​தியா செய்து கொள்​ளும் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் மிகப் பெரிய​தாக இருக்​கும். சிறு விவ​சா​யிகளுக்கு பாதிப்பு ஏற்​படும் என்​ப​தால், பால் பொருட்​களை இந்த ஒப்​பந்​தத்​தில் இந்​தியா சேர்க்​க​வில்​லை.

அமெரிக்​கா​வின் வரி விதிப்பு காரண​மாக உலகள​வில் வர்த்​தகம் தடைபட்​டுள்ள நிலை​யில் இந்த ஒப்​பந்​தம் மிக முக்​கிய​மான​தாகும். தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களுக்கு பெரிதும் உதவும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த ஒப்​பந்​தம், சீனாவை சார்ந்​திருப்​ப​தை​யும் குறைக்க உதவும்.

இந்​தியா மற்​றும் ஐரோப்​பிய யூனியன் இடையே 2024-25-ம் ஆண்​டில் நடை​பெற்ற இருதரப்பு வர்த்​தகம் 136.53 பில்​லியன் அமெரிக்க டாலர் (ரூ1.25 லட்​சம் கோடி) என்​பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியாகிறது
“மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள்” - ‘மன​தின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பெருமிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in