பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை  | சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்வடைந்து 62,643 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து 18,550 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றித் தொடங்கி சீரடையத் தொடங்கியது. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.12 புள்ளிகள் உயர்வடைந்து 62,658.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 18,575.75 இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது, எதிர்பார்த்ததை விட நான்காவது காலாண்டின் உள்நாட்டு உற்பத்தி உயர்வுகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கி மெல்ல சீரடையத் துவங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல்ஸ், இன்போசிஸ் சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வில் இருந்தன. பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐடிசி, இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in