

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் சற்றே ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 98 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்வடைந்து 61,872 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயர்ந்து 18,321 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. காலை 10.24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 80.44 புள்ளிகள் சரிவடைந்து 61693.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.35 புள்ளிகள் சரிந்து 18277.05 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான போக்கு, மாதாந்திர எஃப் அண்ட் ஓ பங்குகளின் காலாவதி காரணமாக ஏற்ற இறக்கத்துடன் பயணித்த இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை சற்று ஏற்றத்துடனேயே நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 98.84 புள்ளிகள் உயர்வடைந்து 61,872.62 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.75 புள்ளிகள் உயர்ந்து 18,321.15 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.