

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிவடைந்து 61,743 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 69 புள்ளிகள் சரிந்து 18,278 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 72.98 புள்ளிகள் சரிவடைந்து 61,908.81 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.40 புள்ளிகள் சரிந்து 18,290.60 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்குகள் காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. நிதி மற்றும் தகவல்தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சி சரிவுக்கு வழிவகுத்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, எல் அண்ட் டி, ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன. பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.