

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 18 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்வடைந்து 61,981 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33 புள்ளிகள் (0.18 சதவீதம்) உயர்ந்து 18,348 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கின. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 175.46 புள்ளிகள் உயர்வடைந்து 62,139.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.25 புள்ளிகள் உயர்ந்து 18,379.65 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது தடுமாறத் தொடங்கியது. பங்குச்சந்தைகளை தூண்டும் வலுவான காரணிகள் இல்லாததால் நிலையில்லாமல் சென்ற வர்த்தகத்தின் முடிவில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன.வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 62,245 ஆகவும், நிஃப்டி 185,420 ஆகவும் இருந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 18.11 புள்ளிகள் உயர்வடைந்து 61,981.79 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.60 புள்ளிகள் உயர்ந்து 18,348.00 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், விப்ரோ, இன்போசிஸ், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி பங்குகள் உயர்ந்து இருந்தன. டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி அடைந்திருந்தன.