சென்செக்ஸ் 371 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 371 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 371 புள்ளிகள் (0.60 சதவீதம்) சரிவடைந்து 61,560 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி104 புள்ளிகள் (0.57 சதவீதம்) சரிந்து 18,181 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 159.89 புள்ளிகள் சரிவடைந்து 61,772.58 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 36.10 புள்ளிகள் சரிந்து 18,250.40 ஆக இருந்தது.

அமெரிக்க கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை காரணமாக எழுந்த அச்ச உணர்வு, உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 371.83 புள்ளிகள் சரிவடைந்து 61,560.64 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 104.75 புள்ளிகள் சரிந்து 18,181.75 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், ஐடிசி, மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜி, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in