

சென்னை: உற்பத்தி போட்டித் திறனுக்கான தேசிய விருது 2022-23 சார்பில், விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆலைக்கு `ஆத்மநிர்பார் தொழிற்சாலை விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்விருதைப் பெறும் முதல் நிறுவனம் ராம்கோ சிமென்ட்ஸ் ஆகும்.
இதுதொடர்பாக ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
முன்னணி தொழிற்சாலைகளின் தற்சார்புத் தன்மை, வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் உற்பத்திக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் இவ்விருதை வழங்குகிறது.
10 குறியீடுகள்: வாடிக்கையாளர் மற்றும் சந்தைதேவைகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் திறன், மாறும் வெளிப்புற மற்றும் உட்புற சூழல்களுக்கு ஏற்ப செயல்பாடுகளில் நிலைத்தன்மை, முன்னேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் முயற்சி, தேவையான நிலைகளில் முக்கியமான தகவல்களை கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட 10 குறியீடுகளின் அடிப்படையில் இந்த ஆலை இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட் டுள்ளது.
மேலும் உற்பத்தி போட்டித் திறனுக்கான தங்கப் பதக்கத்தையும் இந்நிறுவனம் தொடர்ந்து 2-வது ஆண்டாகப் பெற்றுள்ளது. 86 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் நிறுவனங்களுக்கு (ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் 90.3 சதவீதம் பெற்றுள்ளது) தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்வாறு ராம்கோ சிமென்ட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.