Published : 10 Oct 2017 10:01 AM
Last Updated : 10 Oct 2017 10:01 AM
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், நாட்டின் முதல் ஆதார் விமான நிலையமாக மாறுகிறது. இதன் மூலம் அங்கு அனைத்து தேவைக்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆகிறது என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு விமான நிலைய நிர்வாக இயக்குநர் ஹரி மரார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை முற்றிலும் ஆதார் பயன்பாட்டில் இயங்கும் விமான நிலையமாக மாற்றும் திட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங் கியது. தற்போது முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. நிச்சயம் ஆதாரை அடிப்படையாக கொண்டு விமான நிலையத்தை வெற்றிகரமாக இயக்க முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி நிறைவடையும்.
அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி முதல் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் ஆதார் அட்டை மூலம் முழுவதும் செயல்படும் விமான நிலையமாக மாறும்.
இந்த திட்டத்தின் மூலம் போர்டிங் முதல் விமானத்தில் ஏறும் வரையிலான அனைத்து பணிகளும் 10 நிமிடத்தில் முடிந்து விடும்.
இந்த திட்டத்தின் பணிகளை விரைவாக முடிப்பதோடு மட்டுமல்லாமல், விமான பயணிகளின் தனிப்பட்ட அடையாளங்களையும், தகவல்களையும் 100 சதவீத நம்பகத்தன்மையுடன் உறுதி செய்து கொள்ள முடியும். எனவே தான் ஆதார் அட்டையை அடிப்படையாகக் கொண்ட முறையை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் நாட்டின் முதல் ஆதார் விமான நிலையமாக பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் மாற இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் பெங்களூரு விமான நிலையத்தில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT