பங்குச்சந்தை | சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 51 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வடைந்து 61,254 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் உயர்ந்து 18,098 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 51.63 புள்ளிகள் உயர்வடைந்து 61,244.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.30 புள்ளிகள் உயர்ந்து 18,118.15 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி புதன்கிழமை தனது வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் உயர்த்தியது, அதன் விளைவாக உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் சற்றே ஏற்றத்துன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி, பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, டெக் மகேந்திரா, எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், மருதி சுசூகி, இன்போசிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in