சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 463 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்வடைந்து 61,112 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 137 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயர்ந்து 18,052 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. இருந்த போதிலும் வர்த்தகம் நிலையில்லாத தன்மையை அடைந்தது. காலை 09:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 44.06 புள்ளிகள் சரிவடைந்து 60,605.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.25 புள்ளிகள் சரிந்து 17,896.80 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் தொடங்கி நிலையில்லாத தன்மையை அடைந்தது.

பின்னர் ஹெவிவெயிட் பங்குகளின் உயர்வு, நிறைவான வெளிநாட்டு நிதி வருகை காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை நிறைவான லாபத்துடன் நிறைவு செய்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 463.06 புள்ளிகள் உயர்வடைந்து 61,112.44 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 137.65 புள்ளிகள் உயர்ந்து 18,052.70 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, டெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ்,டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, இன்போசிஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in