பங்குச்சந்தை | சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றியே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்து 60,150 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 17,762 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின. வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தன. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 140.29 புள்ளிகள் சரிவடைந்து 59,990.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி35.60 புள்ளிகள் சரிவடைந்து 17,733.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றியே வர்த்தகத்தை தொடங்கின. தகவல்தொழில்நுட்ப பங்குகள் ஏற்றம் பெற்றிருந்த போதிலும், எண்ணெய் மற்றும் ரியாலிட்டி பங்குகள் சரிவில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம் ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in