சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் சற்றே ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 74 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயர்வடைந்து 60,130 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்ந்து 17,769 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை சற்றே சரிவுடன் தட்டையாகவேத் தொடங்கின. காலை 09:27 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 6.62 புள்ளிகள் சரிவடைந்து 60,049.48 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.70 புள்ளிகள் உயர்வடைந்து 17,728.70ஆக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய நிலையில் வர்த்த நேரத்தில் தடுமாற்றத்துடனேயே பயணித்தது. ஹெவிவெயிட் நிறுவனங்களின் நேர்மறையான காலாண்டு வருவாய் அறிவிப்புகளால் பவர் மற்றும் பயன்பாட்டு பங்கிளின் விற்பனையால் பங்குச்சந்தைகள் பிற்பாதியில் வேகமெடுத்து லாபத்தில் நிறைவடைந்தன. ஆனாலும் உலகளாவிய சந்தைகளின் மந்தநிலை, வெளிநாட்டு நிதி வெளியேற்றத்தால் லாபத்தின் விகிதம் குறைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 74.61 புள்ளிகள் உயர்வடைந்து 60,130.71 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.85 புள்ளிகள் உயர்ந்து 17,769.25 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாடா ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர் டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in