Published : 19 Sep 2017 10:08 AM
Last Updated : 19 Sep 2017 10:08 AM

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஐபிஓ-வுக்கு செபி அனுமதி

பொதுத்துறை காப்பீடு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் அரசு வசமுள்ள 9.6 கோடி பங்குகளும், நிறுவனத்தின் பங்காக 2.4 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. இது நிறுவனத்தின் பங்கு மூலதனத்தின் 14.56 சதவீத பங்குகளாகும்.

வர்த்தக வங்கிகளின் தகவல்கள்படி இந்த ஐபிஓ மூலம் ரூ.6,000 கோடி நிதி திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ. 72,500 கோடி நிதி திரட்ட அரசு இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காப்பீடு நிறுவனங்களில் முதன்முதலாக ஐசிஐசிஐ புரூடென்ஷியல் 2016-ம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்டு ரூ.6,000 கோடி திரட்டியது குறிப்பிடத்தக்கது.

காதிம் ஐபிஓ

காலணிகள் சில்லரை விற்பனையில் உள்ள காதிம் நிறுவனம் ஐபிஓ வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.500 -650 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆக் ஸிஸ் கேபிடல், ஐடிஎப்சி வங்கி இந்த ஐபிஓவை நிர்வகிக்க உள்ளன. காதிம் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 828 சில்லரை விற்பனை மையங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x