பங்குச்சந்தை | சென்செக்ஸ்154 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ்154 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 59,594 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.60 புள்ளிகள் சரிந்து 17,618 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும், விரைவில் ஏற்றம் பெற்றன. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 154.40 புள்ளிகள் உயர்வடைந்து 59,722.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி60.25 புள்ளிகள் உயர்வடைந்து 17,679.00 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சூழல், நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தட்டையாக தொடங்கிய போதிலும் ஏற்றத்தை அடைந்தது. முதலீட்டாளர்கள் இன்று வெளியாகவிருக்கும் ஹெச்சிஎல்-ன் காலாண்டு அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா டிசிஎஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in