Last Updated : 26 Sep, 2017 10:19 AM

 

Published : 26 Sep 2017 10:19 AM
Last Updated : 26 Sep 2017 10:19 AM

பொருளாதார ஆலோசனைக் குழுதலைவர் பிபேக் தேப்ராய்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராக உள்ள பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் தற்போது பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார ஆலோசனைக் குழுவை உருவாக்கி அதற்கு தலைவராக பிபேக் தேப்ராயை நியமித்துள்ளார்.

இக்குழுவில் மூன்று பகுதி நேர உறுப்பினர்களாக சுர்ஜித் பல்லா, ரதின் ராய், அஷிமா கோயல் ஆகியோர் இருப்பர். நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை ஆலோசகர் ரத்தன் வாட்டாள், இக்குழுவின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதோடு இக்குழு நுண் பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளையும் பிரதமருக்கு அளிக்கும்.

பொருளாதார விவகாரங்கள் குறித்து தாமாகவே இக்குழு அறிக்கையை பிரதமருக்கு அளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x