Published : 21 Sep 2017 10:20 AM
Last Updated : 21 Sep 2017 10:20 AM

ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும்: ஜேட்லி

இந்திய பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தொடர்பாக நேற்று பேசிய ஜேட்லி, பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த மத்திய அரசு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது. பிரதமர் மோடியுடன் ஆலோசித்த பிறகு கூடுதல் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

இது மிகச் சிறப்பாக செயல்படும் அரசு, தேவையேற்படும்போது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவோம். குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x