பங்குச்சந்தை | சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்வடைந்து 59,956 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 17,639 ஆக இருந்தது.

மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கிய பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 83.45 புள்ளிகள் உயர்வடைந்து 59,916.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.70 புள்ளிகள் உயர்வடைந்து 17,628.85 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் கலவையான சூழல்கள் நிலவிய போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துட்டன் தொடங்கின. ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் ஏற்றத்துககு வழிவகுத்தன

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, என்டிபிசி, விப்ரோ, பவர் கிரிடு கார்பரேஷன், எம் அண்ட் எம், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in