Published : 29 Jul 2014 12:03 PM
Last Updated : 29 Jul 2014 12:03 PM

குமார் மங்கலம் பிர்லா - இவரைத் தெரியுமா?

$ 36 நாடுகளில் செயல்பட்டு வரும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர்.

$ 1995-ம் ஆண்டு இவரது தந்தை இறந்த பிறகு தன்னுடைய 28வது வயதில் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது 200 கோடி டாலர் விற்று முதல் ஈட்டிய நிறுவனம் இப்போது 4,000 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

$ இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 26 நிறுவனங்களை இணைத்திருக்கிறார்.

$ ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார். மேலும் வர்த்தகம் தொடர்பான பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் குழு, செபியின் நிறுவனங்களை நிர்வகிக்கும் குழு, பல நிறுவனங்களின் இயக்குநர் குழு உறுப்பினர் பல பொறுப்புகளை வகித்தவர்.

$ மும்பை பல்கலைக்கழகத்தில் காமர்ஸ் பட்டமும், லண்டன் நிர்வாகக் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் படித்தவர். இவர் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டும் கூட.

$ போர்ப்ஸ், நாஸ்காம், பிஸினஸ் டுடே, எர்னஸ்ட் அண்ட் யங், பிஸினஸ் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகள், அமைப்புகள், நிறுவனங்களின் விருதினைப் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x