Published : 24 Sep 2017 08:29 AM
Last Updated : 24 Sep 2017 08:29 AM

எஸ்பிஐ லைப் ஐபிஓ 3.58 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன

எஸ்பிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு 3.58 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன. இந்த ஐபிஓ மூலம் 8,400 கோடி ரூபாயை திரட்ட எஸ்பிஐ லைப் திட்டமிட்டிருக்கிறது.

நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குக்கு 12.56 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 70 சதவீதம் அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருந்தன. சிறுமுதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 84 சதவீதம் அளவுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்திருந்தன.

ஒரு பங்கின் விலையாக ரூ.685 முதல் ரூ.700 வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதிகபட்ச விலைக்கு பங்குகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் அதிகபட்சம் ரூ.8,400 கோடி வரை திரட்ட முடியும். எஸ்பிஐ மற்றும் பிஎன்பி பரிபா கார்டிப் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் எஸ்பிஐ லைப் ஆகும். இந்த இரு நிறுவனங்களும் 12 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளன. எஸ்பிஐ 8 கோடி பங்குகளும் பிஎன்பி பரிபா 4 கோடி பங்குகளையும் விற்க திட்டமிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x